Posts

உன் இதய கூட்டுக்குள் ஓரிடம் வேண்டும் - அகில் வேந்தன்

Image
என்  தூரத்து தொடுவானமே..!  தொடு திரையில் தோன்றிய  டிஜிட்டல் தூரிகையே..!  உன் எண்ணமிலா, இந்த கற்பனை வானில்  கொஞ்ச நேரம் அனுமதி கொடு.  என் நினைவுகளின் நிறமிகளால்  வண்ணம் தூவி  வானவில்லாக்கிக்கொள்கிறேன்.  நான் சொன்ன தொடுவானம்  எங்கும் தொட்டதில்லை,  எழுநிறம் கொண்டாலும்  வானவில்லின் வண்ணங்கள்  ஒன்றுக்கொன்று குழைந்ததில்லை.  கண்ணியமான தூரத்தில் நின்று,  தொடர்பில்லா உன்னை,  யாரோ ஒருவனாய் கவித்து கொள்கிறேன்.  என்விழிகளுக்கு புலனத்தில் புலபட்டவளே..! பிறந்தநாள் வாழ்த்தில்  புதிதாய் பிறந்தவளே..!  பேரும் ஊரும் ஏதுமில்லை,  முகமுண்டு முகவரியில்லை, உனை பார்த்த சில நிமிட தாக்கம்,  தாயை பிரியும் சேயின் ஏக்கம்,  களவு போனது என் இரவின் தூக்கம் , ஒரு செயலியால்  ஒரு நாளும், நான் செயலிழந்ததில்லை. மொத்தமாக  என்னை முடக்கி போட்ட  இறக்கமற்றவள் நீ..!  அகண்ட பாரதம் கேட்க்கும் நாட்டில் குரலை கூட  என் செவிகளுக்கு தராத, குறுகிய இதயமற்றவள் நீ..!  அடையாளம் ஏதும்  தெரியாமல் ...

சாதி சாக்கடையில் மூழ்கி கிடக்கும் சீர்காழி சட்ட மன்ற தொகுதி - அகில் வேந்தன்

Image
21ம் நூற்றாண்டிலும் தொடர்கிறது தீண்டாமை, பூமியில் மனித குலம் எத்தகைய வளர்ச்சி அடைந்தாலும், சாதி மத பிரிவினைவாத பொய் கற்பிதங்கள் மட்டும் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. சீர்காழி சட்ட மன்ற தொகுதி தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்கள் பெரும்பான்மையாக வாழ கூடிய பகுதி, இங்கு அனைத்து தரப்பு மக்களும் வசிக்கின்றனர், நகர்ப்புற நிலையை காட்டிலும் கிராம புறங்களில் சாதி வேற்றுமை பிரச்சினைகள் தீவிர நிலையில் உள்ளது என்பதுதான் உண்மை நிலவரம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுடுகாட்டுக்கு வழியில்லை, தாழ்த்தப்பட்ட மக்கள் காலம் காலமாக ஒரு வீதி வழியாக திருவிழா காலங்களில் சாமி காவடி பால்குடம் போன்றவற்றை மேளதாள இசையுடன் எடுத்து சென்றால் சாதி அரிப்பெடுத்த ஆண்டைகள் எங்கள் வீதி வழியாக செல்லாதீர்கள், வேறு வழியாக செல்லுங்கள் என அடிவருடிகளை தன்வசம் வைத்துக் கொண்டு கட்ட பஞ்சாயத்து செய்கின்றனர். அரசு அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் கூட தலித்துகள் தீமிக்க கூடாது என்ற கட்டுப்பாடு நிலவுகிறது. சில டீ கடையில் இரட்டை குவளை முறையும் சில்வர் தம்பளர் போர்வையில் நிகழ்கிறது.... பல இடங்களில் பஞ்சமிநிலங்களும் அரசுக்கு சொ...

கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாள் - அகில் வேந்தன்

Image
  திராவிட கோட்டை தமிழ்நாடு, இங்கு அவ்வளவு எளிதாக ஒரு பெரிய கட்டமைப்பு இன்றி சுயேட்சையாக ஒரு தொகுதி பெருவது என்பது சாதாரண விடயமல்ல. தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமை டாக்டர் கலைஞர் அவர்களின் வளர்ப்பில் வளர்ந்த செல்லபிள்ளை வென்று காட்டியது விருத்தாசலம் சட்ட மன்ற தொகுதியை அன்று... அவர் தான் விஜயகாந்த்... திமுக வின் வரலாறு தனக்கான எதிரியை கூட தானே வளர்த்துவிடும்... ஆனால் அது எந்த வகையிலும் திமுகவை பாதிக்காது... ஆம் அதுவே திமுகவின் சிறப்பு... ஆரம்ப காலம் தொட்டு மக்களுக்கான பணியை சத்தமில்லாமல் செய்து காட்டியது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை தந்தது. விஜயகாந்த் மீது, சிவாஜி, பாக்கியராஜ்,T.R , முதல் இன்றளவும் வாயாலே வடை சுடும் இரஜினி வரை தொட முடியாத சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பு வரை சென்றவர், கேப்டன் விஜயகாந்த் அரசியல் தனிபலம் இருந்தது ஆனால் அது நீண்ட காலமாக நீடிக்கவில்லை பழம் நழுவி பாலில் விழுந்திருக்கலாம் தமிழ்நாடும் தேமுதிக வும் சிறப்பாக இருந்திருக்கும்... ஆனால் இன்று பத்தோடு ஒன்றாய் தேமுதிக ஆனது வேதனை அவர் தனிபட்ட வாழ்விலும் பொதுவாழ்விலும் ஆயிரம் விமர்சனம் இருந்தாலும், எதிர் தளத்தில் சி...